ATC TAMIL
கட்டுப்பணம் செலுத்தினார் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன்
மக்கள் புதியவர்களை ஆதரிக்க வேண்டும் - பருத்தித்துறை சுயேட்சை குழு கோரிக்கை
சுபீட்சமான ஒரு பிரதேசத்தை உருவாக்க உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் தமது சுயேட்சை குழுக்கு வாக்களிக்க வேண்டுமென பருத்தித்துறை பிரதேச சபையில் சுயேட்சை குழுவாக போட்டியிடும் அதன் தலைவர் முல்லைதிவ்யன் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள சமூகமாற்றத்திற்கான ஊடக மையத்தில் நேற்று(11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
“எங்களுடைய மண், மக்கள் நலனை பிரதான இலக்காக கொண்டு நாம் வரித்துக் கொண்ட தமிழ்த் தேசிய பற்றோடு பிரதேச அபிவிருத்தியை பிரதான இலக்காக கொண்டு நாங்கள் உள்ளூராட்சி சபை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகின்றோம்.